காதலாம் காதல் கன்றாவிக் காதல்

2007/01/24



நான் சிரிக்க நீ சிரித்து
நான் அழ நீ அழுது
நான் முறைக்க நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது






போ என்றேன் போனாய்

வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறது







ஏன் இப்படியென்றபோது எல்லாமே

என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன்





போயேபோய் விட்டாய் நல்லவேளை

ஏனென கேட்கவில்லை கேட்டிருந்தால்
என்மீது கொண்ட காதலால் என்றிருப்பாய்.

-Sutheesan-


24 மறுமொழி:

Anonymous said... [Reply]

:-) & :-(

Anonymous said... [Reply]

யார் இந்த sutheesan?

Anonymous said... [Reply]

காதலே சந்தேகத்திலிருந்து ஆரம்பிக்கிறது தானே?.

அவளுக்கு எத்தனை வயது இருக்கும், கலியாணம் ஆகியிருக்குமா? குழந்தையிருக்குமா? இப்பிடி....

ஆகா ஆரம்பிச்சுட்டருய்யா ;-)))

நன்றி முகில் தங்களுடைய வருகைக்கு

//யார் இந்த sutheesan? //

நான் மாமு என்று அன்பாக அழைக்கும் என் மாமனார்.:-)) இலங்கையில் இருக்கிறார்.

தர்சன்,
நன்றாக இருக்கிறது.

/* ஏன் இப்படியென்றபோது எல்லாமே
என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன் */

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று தன் உணர்வுகளை மறைத்து அல்லது தன் உணர்வுகளைக் கொன்றுவிட்டு நடைபிணமாக வாழும் பெண்களுடன் வாழ்வதைவிட தன் உணர்வுகளையு்ம், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு வாழும் பெண்ணோடு வாழ்வதில்தான் இன்பம்.
நல்ல கருத்தாழமுள்ள கவிதை.
வாழ்த்துக்கள்.

ithu verum kaathal all theiveega kaathal :-)

\\நான் சிரிக்க நீ சிரித்துநான் அழ நீ அழுதுநான் முறைக்க நீ முறைத்துஎன் காதலியானாய்....\\ addictive luv.

//காதலே சந்தேகத்திலிருந்து ஆரம்பிக்கிறது தானே?.

அவளுக்கு எத்தனை வயது இருக்கும், கலியாணம் ஆகியிருக்குமா? குழந்தையிருக்குமா? இப்பிடி.... //

அப்படியா! அப்போ அதன் பெயா; காதலா?!!

Anonymous said... [Reply]

அழகான கவிதை. :)

தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி.

-ரசிகா.

Anonymous said... [Reply]

ஆதித்ததாஸன்
27-1-2007

வணக்கம் தர்சன்!
முதற்கண் வாழ்த்துக்கள்! அத்தோடு நன்றிகள்!
தமிழ்மணத்தில் தாங்கள் இணைத்த கவிதை
"காதலாம் காதல் கண்றாவிக்காதல்" வாசித்தேன்!

இரசித்தேன்! சிரித்தேன்! சிந்தித்தேன்!

நல்ல சிந்தனைக்கு விருந்தான கவிதை!
கவிஞனின் உணர்வின் அலை கவிதையாய்
கண்டேன்! அந்தக்கவிஞனுக்கு அடியேனின்
வாழ்த்துக்கள்! நல்ல கவிவளம் தெரிகிறது!
அவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்!
நன்றிகள்!

சட்டென்று பற்றிய கவிதை!

பட்டென்று விழியுயர்த்தி புருவம்
மெட்டொன்று தட்டிய கவிதை!

இதயம்
சட்டென்று மடல் எழுதவைத்துவிட்ட கவிதை!

மீண்டும் அக்கவிக்கும் தங்களுக்கும் நன்றிகள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

//ஆகா ஆரம்பிச்சுட்டருய்யா ;-)))
//


ஆரம்பித்தது நான் அல்ல சுதேசன். நன்றி வருகைக்கும் தருகைக்கும் மதிப்புக்குரிய திரு கானா பிரபா அவர்களே.

//கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று தன் உணர்வுகளை மறைத்து அல்லது தன் உணர்வுகளைக் கொன்றுவிட்டு நடைபிணமாக வாழும் பெண்களுடன் வாழ்வதைவிட தன் உணர்வுகளையு்ம், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு வாழும் பெண்ணோடு வாழ்வதில்தான் இன்பம்.
//

அனுபவசாலி நீங்கள் சொன்னால் சரிதான் வெற்றி. :-))

//ithu verum kaathal all theiveega kaathal :-) //

அதுவே அதுவே

//அழகான கவிதை. :)

தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி.

-ரசிகா-.//

திரும்ப போடுவது இதுதானா?
நன்றி

நன்றி ஆதித்ததாஸன்,

தங்களுடைய பாராட்டுக்கள் சுதேசனை கட்டாயம் சென்றடையும்.

Anonymous said... [Reply]

குளம்பிட்டேன்...

//குளம்பிட்டேன்...//

ஏன் ! தூயா ?

Unknown said... [Reply]

ம்ம்ம்... எளிய வார்த்தைகளால் ஒரு நல்ல கவிதை.

(ஆனால் கருத்தில் உடன்பாடில்லை :) )

//ம்ம்ம்... எளிய வார்த்தைகளால் ஒரு நல்ல கவிதை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//ஆனால் கருத்தில் உடன்பாடில்லை//

அருட்பெருங்கோ அடிமைத்தனமான மனைவி மட்டுமல்ல காதலியும் அவள் காதலும் வெறுப்படைய செய்யும்தானே. :-))

Anonymous said... [Reply]

hello
sutheesan unga kavithaigalil tamil manam undu'but tamil suvai illaye.nenga tamilan endru solli thalai nimirnthu nitka vendama?so avoid u'rtamil mistakes plz.ithu advice ilai.ungal valarchiku ithu thadayaha irukakudathu endra oru nallennam than.athai yetru kolvathum yetrukollathathum padaippalar ungaluke uriyathu.

enakkum oru santheykam ethey pol en karpanaiyum

எழுத்துப்பிழைகள் இருக்குமானால் அதை நானும் சுதேசனும் சேர்ந்தே திருத்துகிறோம். நன்றி நன்பரே

நன்றி சுரேசு :-)) சந்தேகம் தொடரட்டும்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users