மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . )
மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த
மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்
மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! )
நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும்
ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும்
தன்வசம் இழுத்துப்போகையிலே
மரணம் ஓர் வினா ( ? )
நோயினால் துன்புறும் மனிதர் தமை
உலகிற்கு அதிபாரமாய் இருக்கும் கயவர்தமை
பூமியிலே விட்டுவைக்கயிலே
மரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்
மொத்தத்தில் மரணம் ஓர் புதிர்
தவழ்ந்த குழந்தை முதல் தள்ளாடும்
தாத்தா வரை தன்வசம் அணைப்பதால்
மரணம் ஒரு புரியா புதிர்.
15 மறுமொழி:
கவிதை வித்தியாசம நல்லா இருக்குங்க
வாழ்த்துக்களுடன்...
கவிதை வித்தியாசம, நல்லா இருக்குங்க
வாழ்த்துக்களுடன்
அடடா மிக்க நன்றி சுதேசன். என்னங்க நீங்க தமிழ் இப்பிடி கதைக்கிறீங்க.. ஏனுங்கோ?
ரசிக்கும் படியான ஒரு கவிதை.
ரசிக்கத்தகுந்த கவிதைக்கு நன்றிகள் தர்சன்
thanks Kumar
//*//மரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்//*//
ரசிக்கவைத்த வார்த்தை தர்சன். நல்லாருக்கு கண்ணு.
நன்றி தங்களின் வருகைக்கு கானா பிரபா. தங்களுடைய அடுத்த பதிவு என்னவோ?
"மரணக்குறி" கவிதை நன்றாக இருக்கிறது தர்ஸன். இது தேன்கூடு போட்டிக்காக எழுதப்பட்டதா? கவலைவேண்டாம் முதலிடம் கிடைக்காவிட்டாலும் கடைசிக்கு முதலிடம் கிடைக்கும். :)
நன்றி ஞான்ஸ் தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும்.
ரொம்ப அருமையான கவிதை......
//கவலைவேண்டாம் முதலிடம் கிடைக்காவிட்டாலும் கடைசிக்கு முதலிடம் கிடைக்கும். :) //
MANNAIOOSI நீங்கள் கூறியதும் பார்க்க பருவாயில்லை எனக்கு விழுந்த ஓட்டுக்கள். :-))
நன்றி சுடர்விழி
realy superb amazing kavithai
மிக்க நன்றி சிறீகாந்
Post a Comment