உயிர் உள்ள சடலங்கள்

2010/09/26


          
ழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம்
கால்கள் இரண்டும் பல மிளந்து
முள்ளந்தண்டில் மின்பாய

மழைச் சாரலின் நடுவில்
மரணத்தின் ஓலம்

காது இரண்டும் செவிடுபட
சத்தங்கள் சித்தத்தை வதைக்கின்றன
சேதி கேக்க வாய்ப்பு இல்லை
சேதத்தின் தன்மை தெரியவில்லை
வேதங்கள் ஓதி விடியல் நோக்க
விடியலும் விரக்தியில் விம்முகிறது

சந்தனக் கட்டையில் பல்லுத் துலக்குவது
பரம்பரை வழக்கம்
சந்தனத்தை உரசி நெற்றியில் இடுவது
பாரம்பரிய விளக்கம்
தூய இருள் - அதற்கு துறவு கோல் ஒளி
துன்பச் சிறை - அதற்கு துறவு கோல் - எந்த வழி


சொந்த மண் தீயின் நாக்கில்
வெந்து தீய்கிறது
வந்த மண் வந்தாரை மீண்டும்
வழி அனுப்புகிறது
எந்த மண்ணை நாங்கள் சுவாசிப்போம்

மழைச்சாரலின் நடுவில் மரண ஓலம்

வேட்டுச் சத்தங்கள் வானைப் பிளக்க 
ஓய்ந்தது அந்த ஓலம் - பாசையும் இல்லை
நாட்டின் நலம் கருதி வீட்டின் சாரலில்
விழுந்தது மழை பெருத்த ஓசையில்
காற்று கதறியது இடியோ அதறியது
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி
பளிச் பளிச் என்று முத்தமிட்டன – அது மின்னல்

நாட்கள் எண்ணினோம் நாங்கள்
ஒளிந்த தலைகள் மீண்டும் வெளியில் தோன்றின
சேதியேதும் புரியவில்லை ஆனால் - ஓலத்தின்
ஓசை ஒழிந்ததற்கு அர்த்தம் புரிந்தது

அணைகளை தாண்டி வெள்ளம் விரைந்தோட அந்த
வெள்ளத்தின் மேல் செத்த உடல்கள் உருண் டோடியது
சோவென்று புயலும் அவற்றை விரட்டிச் சென்றது

விறைத்த உடலுடன் விம்மாத மனதுடன் விழித்தது 
கண்களில் கண்ணீர் இல்லை
மிதந்த சடலங்களை விரைந்து எடுக்கவில்லை
விலகாமல் நின்ற நாமும் உயிர் உள்ள சடலங்கள்தான்.

8 மறுமொழி:

Anonymous said... [Reply]

அருமை.....

பகிர்வு அருமை!

Keddavan said... [Reply]

தர்சன் நீ வர வர பண்பட்ட கவிஞர்கள் மாதிரி தத்துவங்கள் எல்லாம் தத்துருபமாக எழுதத்தொடங்கீட்ட...

நன்றி நன்பா ;-)

very good

very good

நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.


நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

viveka said... [Reply]

nice differend words used

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users