வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம்
உழைத்து உண்பதே
வரும்கால லட்சியம் .
வேலை கொடுத்தல்
தந்தவர் மாணம்-நிலைக்கும்
தர அவர் மறுத்தால்
பாவம் அவரை கலைக்கும் .
அதோ வாணம்
பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
குறுகிக் கிடக்கு .
'வேலை நிட்சயம்'
வேலை ஒன்று கிடைக்காமல்
என்குடும்பம் பிழைக்காது
வயிறுகள் எரியலாம்
அடுப்பு மட்டும் எரியாது.
வேலைத்தளம் திறந்த்தாலும்
எனக்கு வேலை கிடைக்காது
தேடுவேன் தேடுவேன்
கிடைக்கும் வரை ஓயாது.
ஒவ்வொரு மாதமும்
செலவு நிறைந்துள்ளதே
ஒவ்வொரு நாட்களும்
வறுமை எமைக் கொல்லுதே.
"எங்கள் வாழ்க்கை
என்று உருப்படுமோ"
"வேலை நிட்சயம்
ஒருவனது திண்டாட்டம்
அடுத்தவரின் கொண்டாட்டம்
அவர்களின் நிலைகளும்
என்று வரும் என்னாட்டம்.
சொத்து சுகம் இல்லாமல்
வாழ்வில் என்ன சந்தோசம்
காரிலே செல்வதில்
இருக்கும் ஒரு உட்சாகம்
குடும்பமும் பிள்ளையும்
எனது சந்தோசமே
வேலை தேடுவது
எனது போராட்டமே.
என்றோ ஒருநாள் வேலை
கிடைத்திடுமே........................
ஒழித்தோன்றல் பகீ
(neram-11.14 iravu 29-10-1999)