ஊர் வசை

2009/12/21

























கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டும் இங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை


நெற்றியிலே பொட்டைக் காணோம்
பக்கத்திலே கணவனைக் காணோம்
காலிலே முள்ளுக் குத்தக்
காப்பதற்கும் செருப்பைக் காணோம்
                                                    (கையிலே)


கண்ணைச் சுற்றி கண்ணீர் உண்டு
உடலை ஒட்டி நோயும் உண்டு
எண்ணம் எல்லாம் பயமும் உண்டு
ஆறுதற்கு - இது காலமும் அன்று
                                                 (கையிலே)


தொடர்ந்த பாவம் நெற்றிவரை
கட்டிய பாவம் கழுத்து வரை
தொட்ட பாவம் வயிறு வரை
விட்டதா பாவம் இன்று வரை
                                     (கையிலே)


கன்னிப் பருவத்திற் கற்சிலையாள்
கற்றாள் நற்பாடம் பொற்சிலையாய்
காதற் கனியொன்று கைப்பிடித்தாள்
தொடர்ந்தாள் நெற்றியில் பொட்டுமிட்டான்
                                                                (கையிலே)


உற்றார் உறவினர் ஊர்வலமாம்
ஊரார் வலம் வரக் கச்சேரியாம்
கற்றார் நல்லதோர் நாள் சொல்ல
காலைப் பனியிலே கல்யாணமாம்
                                                (கையிலே)


பெற்றாள் அவள் பெண் இயந்திரமாம்
கற்றாள் பாடம் கடைசியிலே 
கணவன் பெற்றான் புதிய களியொன்று
கை விட்டான் சலித்தது இவளென்று
                                                      (கையிலே)


உற்றார் மற்றார் சூழ்ந்து வந்து
சுட்டார் வசையால் - செயலிழந்து
செத்தால் உலகம் இனிக்கு மென
இதுதான் முதலும் முடிவுமென
நடந்தாள் - அவனிடம்


கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டு மிங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை



-பகீரதன்-
READ MORE - ஊர் வசை

வேலை நிட்சயம்

2009/09/23





வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம் 
உழைத்து உண்பதே 
வரும்கால லட்சியம் .


வேலை கொடுத்தல் 
தந்தவர் மாணம்-நிலைக்கும் 
தர அவர் மறுத்தால் 
பாவம் அவரை கலைக்கும் .


அதோ வாணம்
   பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
   குறுகிக் கிடக்கு .


'வேலை நிட்சயம்'


வேலை ஒன்று கிடைக்காமல் 
என்குடும்பம் பிழைக்காது
வயிறுகள் எரியலாம்
அடுப்பு மட்டும் எரியாது.

வேலைத்தளம் திறந்த்தாலும்
எனக்கு வேலை கிடைக்காது
தேடுவேன்  தேடுவேன் 
கிடைக்கும் வரை ஓயாது.

ஒவ்வொரு மாதமும் 
செலவு நிறைந்துள்ளதே
ஒவ்வொரு நாட்களும்
வறுமை எமைக் கொல்லுதே.

"எங்கள் வாழ்க்கை
என்று உருப்படுமோ"

"வேலை நிட்சயம் 

ஒருவனது திண்டாட்டம் 
அடுத்தவரின் கொண்டாட்டம்
அவர்களின் நிலைகளும் 
என்று வரும் என்னாட்டம்.

சொத்து சுகம் இல்லாமல் 
வாழ்வில் என்ன சந்தோசம் 
காரிலே  செல்வதில் 
இருக்கும் ஒரு உட்சாகம்

குடும்பமும் பிள்ளையும் 
எனது  சந்தோசமே 
வேலை தேடுவது 
எனது போராட்டமே.

என்றோ ஒருநாள் வேலை 
        கிடைத்திடுமே........................



ஒழித்தோன்றல் பகீ
(neram-11.14 iravu 29-10-1999) 



READ MORE - வேலை நிட்சயம்

இதுதான் விலை

2009/05/29




ஆடவர் என்ன விலை? என்ன விலை?
      மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம்
காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல
      காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர்
வீரம் பேசும் ஆண்களுக்கு
      பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
சோரம் போவது நாங்கள் அல்ல
      வீரம் பேசும் ஆண்கள் தான்


உடல் விற்று உலாவும் பெண்களே
      உலகம் அல்ல – ஆனால்
தம்மை தாமே பேரம் பேசும்
      ஆண்களும் அருமை அல்ல
வீட்டுக்குள்ளே கூடுகட்டி
      கூட்டினுள் எமை அமர்த்தி
நாட்டுக்குள் ஆண்மை பேசும் ஆடவரே
      உம்மை பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
நாளை நாம் உங்கள் வீட்டுக்கு வருவோம்
      அங்கே நீங்கள் சமைந்திருங்கள்
காளை உந்தன் ஆண்மை பார்க்க
      காசுப் பொதிகள் எங்கள் கையில் இருக்கு
சேலை கட்ட தெரியாவிட்டால் தேற்றிக் கொண்டு
      ஆடை மாற்று
சேதி சொல்ல ஆள் வருவார் அதுவரை
      காத்திருங்கள்


நான்கு பேரை கேட்டு உந்தன்
      பெயரை நாங்கள் அறிந்த பின்பு
சேதி சொல்ல ஆள் வருவார்
      அதுவரை நீங்கள் காத்திருங்கள்
கேடு கெட்ட ஆண்களுக்கு
      கோடு போட்டு வீட்டில் வைக்க
பெற்றோர் உமக்கு எச்சரிக்கை
      பொறுப்போடு கண்காணிக்க


நாளை நம்மவர் உன்வீடு வரும்போது – நீ
      தீயவன் எனக் கேட்டால்
கல்யாணச் சந்தையில் உனக்கு கால் ரூபா கூட
      கொடுக்க மாட்டோம்
காலம் தோறும் காத்திருந்து
      கந்தலாகி மனம் உடைந்து
மானங் கெட்டு மனிதர்களிடையில்
      தீய சொற்களுக்குள்ளாகி
கோலம் மாறி களையிழந்து
      காளை என்னும் செருக்கிழந்து
மூளை கெட்டு முதுமை பெற்று
      மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு




- நா. பகீரதன் -
READ MORE - இதுதான் விலை

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users